சென்னை, வியாசர்பாடி, தொன் பாஸ்கோ இளைஞர் மன்றத்தில் 39 ஆண்டுகள் சிறப்பாகப் பணிபுரிந்து ஓய்வு பெறும் வடக்கு மண்டலம் ஊர் காவல் படை கோட்டத் தளபதி திரு. fx.ஆரோக்கிய தாஸ் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் வடக்கு மண்டல தளபதி திரு. சஞ்சய் பன்சாலி தலைமையிலும் கோட்டத் தளபதி திரு ஜி.பரமசிவம், pc என்.ராமசுப்ரமணியன், APC ஏ.எஸ்.உதயகுமார், PC பி.சத்தியநாராயணன், CC டி. ராஜா மற்றும் அனைத்து ஊர் காவல் படை அதிகாரிகள் ஊர்க்காவல் படை வீரர்கள் காவல்துறை அதிகாரிகள் நண்பர்கள் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டனர்..
コメントを書く